Showing posts with label PIT. Show all posts
Showing posts with label PIT. Show all posts

Saturday, January 10, 2009

பிடித்ததில் எடுத்தது ! 2009 Jan PIT Contest

'எடுத்ததில் பிடித்தது' என்று பார்க்கும்போது, அதில் வரும் ஏகப்பட்ட குவியலில் (சொல்லிக்க வேண்டியது தான் !! :)) 'பிடித்ததை எடுக்க' போராட்டம்.

வாங்க, நீங்களும் களத்தில குதிங்க. தெரிவில்லாத இக்குவியலில், உங்க செலக்ஷன் என்னன்னு பின்னூட்டுங்களேன்.

இந்த முறை, வோட்டிங் பார்த்து போட்டிக்குள்ள போகலாம் என எண்ணம் :))

கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் --- இன்னும் நான்கு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள வந்து, மேலும் உங்க பங்குக்கும் குழப்'பிட்'டுப் போங்க =:)))



படம் 1: அமெரிக்கத் தலைநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு ஆலய கோபுரம்.

வான் தொடும் வெண்மை
கண் படும் மென்மை.
சிற்பங்களின் அழகில்
தென்படும் பெண்மை.



படம் 2: சிகப்பு ரோஜா.

செக்கச் செவந்தவளே
செகப்பு ரோஜாவே !
பூக்களின் அரசியே
புன்னகைக்க வைப்பாயே !!!



படம் 3: பிங்க் பூக்கள்

பச்சைப் புற்களில்
பதுங்கும் பூக்களே,
பயம் கொள்ள வேண்டாம்
பறித்திட மாட்டோம் !!!



படம் 4: ஆரஞ்சுப் பூ

என்ன தான் பேரோ ?
ஆரஞ்சுப் பூவே !
குலை தள்ளும் அழகில்
கலை கண்டு மகிழ்வோம் !!!



படம் 5: வாத்துக்கள்

தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!



படம் 6: வண்ண மீன்கள்

எத்தனை வண்ணங்கள் இங்கு
அத்தனையுமே அழகு,
நீரின் குளிர்ச்சியிலே அவை
சேர்ந்து நிறைத்ததுவே !



படம் 7: மீசைக்கார மீன்கள்

கரை தொடும் நீரில்
நுரை தள்ள ஆடும்
மீசைக்கார மீன்களோடு, ஒரு
பாசக்கார வாத்து !!!



படம் 8: உரித்தால் ஒன்றுமில்லை

உருண்டு பருத்திருக்கும்
உரித்தால் ஒன்றுமில்லை.
புரிந்தால் வாழ்விலே
கவலை என்றுமில்லை !!!
(அப்பாடா, ஒரு தத்துவமும் சொல்லியாச்சு :)))


Friday, December 12, 2008

தார் ரோட்டு மழையில் நிழல் - 2008 Dec PIT contest



தார் ரோட்டு மழையில்
தவழும் செவ் விலையே

தவழும் இலை அழகில்
படரும் அதன் நிழலே !

---

இங்கோர் இலையுதிர் கால மழை நாளில், சட சடத்து உருளும் இலைகளெல்லாம் சத்தமின்றி குளித்திருக்க, சப்தமில்லாமல் சுட்ட படம். இந்த மாத பிட் போட்டிக்கு. நல்லா இருந்தா ஒரு வரி, 'நச்'னு பின்னூட்டுங்க :)))

ரெண்டு நாள் தான் இருக்காமே. போட்டிக்கு அனுப்பிடலாமா ???