மூன்று நாட்களாக வீட்டுக்குள்ள கட்டிப் போட்ட ஐஸ் ஸ்ட்ராம், ஒருவாராக இடத்தைக் காலி செய்தது. இறுகிப் போயிருந்த ஐஸ், பகலவன் கருணையால் இப்ப இளக ஆரம்பித்திருக்கிறது.
நேற்று முன் தினம், ஒரு அரை நாள் அலுவலகம் சென்ற போது (பனியைப் பொருட்படுத்தாது, என் கடன் பணி செய்து கிடப்பதே :))) வழியில் எடுத்த புகைப்படங்கள், மற்றும் எங்கள் வீட்டில், அருகில் எடுத்த படங்கள் என இங்கே வரிசையாய் ...
ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா ...
ஐஸ் வைத்த மரம்
அழகா வீட்டின் முன் ...
பாதை எல்லாம் கட்டியான
பனிச் சறுக்கு ரோட்டிலே ...
பாதை எல்லாம் கட்டியான
பனிச் சறுக்கு ரோட்டிலே ...
குதித்தோடி உருண்டாயோ
தாவிப் புரண்டாயோ ...
வெண்கட்டித் தோட்டத்துள்
புதையுண்ட சிறுவீடு
தபால்காரர்:
என் கடன் பனியிலும்
பணி செய்வதே !!!
தார் ரோட்டை மறைத்து
தரையிறங்கிய வெண்மேகம்
வெண்பட்டில் முளைத்த
கண்ணாடிப் புற்கள்
எவ்வளவோ சேகரித்தும் ...
பனிமனிதன் செய்ற அளவிற்கு தேறலையே !!!
மொத்தமாய் உறைந்த
முள்நீர்த் தொட்டி
விரிசடை வெண்சடை
பரப்பிய கூரை
அம்மா தினம் பேன்-கேக் ஊத்தி தர்றாங்க. நாம அவங்களுக்கு ஐஸ்-கேக் கொடுக்கலாம் ...
Thursday, January 29, 2009
Saturday, January 10, 2009
பிடித்ததில் எடுத்தது ! 2009 Jan PIT Contest
'எடுத்ததில் பிடித்தது' என்று பார்க்கும்போது, அதில் வரும் ஏகப்பட்ட குவியலில் (சொல்லிக்க வேண்டியது தான் !! :)) 'பிடித்ததை எடுக்க' போராட்டம்.
வாங்க, நீங்களும் களத்தில குதிங்க. தெரிவில்லாத இக்குவியலில், உங்க செலக்ஷன் என்னன்னு பின்னூட்டுங்களேன்.
இந்த முறை, வோட்டிங் பார்த்து போட்டிக்குள்ள போகலாம் என எண்ணம் :))
கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் --- இன்னும் நான்கு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள வந்து, மேலும் உங்க பங்குக்கும் குழப்'பிட்'டுப் போங்க =:)))
படம் 1: அமெரிக்கத் தலைநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு ஆலய கோபுரம்.
வான் தொடும் வெண்மை
கண் படும் மென்மை.
சிற்பங்களின் அழகில்
தென்படும் பெண்மை.
படம் 2: சிகப்பு ரோஜா.
செக்கச் செவந்தவளே
செகப்பு ரோஜாவே !
பூக்களின் அரசியே
புன்னகைக்க வைப்பாயே !!!
படம் 3: பிங்க் பூக்கள்
பச்சைப் புற்களில்
பதுங்கும் பூக்களே,
பயம் கொள்ள வேண்டாம்
பறித்திட மாட்டோம் !!!
படம் 4: ஆரஞ்சுப் பூ
என்ன தான் பேரோ ?
ஆரஞ்சுப் பூவே !
குலை தள்ளும் அழகில்
கலை கண்டு மகிழ்வோம் !!!
படம் 5: வாத்துக்கள்
தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!
படம் 6: வண்ண மீன்கள்
எத்தனை வண்ணங்கள் இங்கு
அத்தனையுமே அழகு,
நீரின் குளிர்ச்சியிலே அவை
சேர்ந்து நிறைத்ததுவே !
படம் 7: மீசைக்கார மீன்கள்
கரை தொடும் நீரில்
நுரை தள்ள ஆடும்
மீசைக்கார மீன்களோடு, ஒரு
பாசக்கார வாத்து !!!
படம் 8: உரித்தால் ஒன்றுமில்லை
உருண்டு பருத்திருக்கும்
உரித்தால் ஒன்றுமில்லை.
புரிந்தால் வாழ்விலே
கவலை என்றுமில்லை !!!
(அப்பாடா, ஒரு தத்துவமும் சொல்லியாச்சு :)))
வாங்க, நீங்களும் களத்தில குதிங்க. தெரிவில்லாத இக்குவியலில், உங்க செலக்ஷன் என்னன்னு பின்னூட்டுங்களேன்.
இந்த முறை, வோட்டிங் பார்த்து போட்டிக்குள்ள போகலாம் என எண்ணம் :))
கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் --- இன்னும் நான்கு நாட்கள் இருக்கு, அதுக்குள்ள வந்து, மேலும் உங்க பங்குக்கும் குழப்'பிட்'டுப் போங்க =:)))
படம் 1: அமெரிக்கத் தலைநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு ஆலய கோபுரம்.
வான் தொடும் வெண்மை
கண் படும் மென்மை.
சிற்பங்களின் அழகில்
தென்படும் பெண்மை.
படம் 2: சிகப்பு ரோஜா.
செக்கச் செவந்தவளே
செகப்பு ரோஜாவே !
பூக்களின் அரசியே
புன்னகைக்க வைப்பாயே !!!
படம் 3: பிங்க் பூக்கள்
பச்சைப் புற்களில்
பதுங்கும் பூக்களே,
பயம் கொள்ள வேண்டாம்
பறித்திட மாட்டோம் !!!
படம் 4: ஆரஞ்சுப் பூ
என்ன தான் பேரோ ?
ஆரஞ்சுப் பூவே !
குலை தள்ளும் அழகில்
கலை கண்டு மகிழ்வோம் !!!
படம் 5: வாத்துக்கள்
தாயைப் பின் தொடரும்
காலம் போய்
தன்பிள்ளையைத் தான் தொடர,
காலம் மாறுகிறதோ ?!!
படம் 6: வண்ண மீன்கள்
எத்தனை வண்ணங்கள் இங்கு
அத்தனையுமே அழகு,
நீரின் குளிர்ச்சியிலே அவை
சேர்ந்து நிறைத்ததுவே !
படம் 7: மீசைக்கார மீன்கள்
கரை தொடும் நீரில்
நுரை தள்ள ஆடும்
மீசைக்கார மீன்களோடு, ஒரு
பாசக்கார வாத்து !!!
படம் 8: உரித்தால் ஒன்றுமில்லை
உருண்டு பருத்திருக்கும்
உரித்தால் ஒன்றுமில்லை.
புரிந்தால் வாழ்விலே
கவலை என்றுமில்லை !!!
(அப்பாடா, ஒரு தத்துவமும் சொல்லியாச்சு :)))
Subscribe to:
Posts (Atom)