Tuesday, June 23, 2009

நயம் மிகு நயாகரா நீர்வீழ்ச்சி - புகைப்படங்கள்

கெளம்பிட்டோம்ல ... ரொம்ப நாளா பார்க்கணும் என்று, ஒரு சில முறை ஆரம்பித்தும் போக முடியாது, தற்போது நிறைவேறியது நயாகரா நீர்வீழ்ச்சி பயணம். எங்க ஊரில் இருந்து போக வர இரண்டாயிரத்து ஐநூறு மைல். வண்டி ஓட்டிருவோமா ? பசங்களுக்கு சரியா வருமா ? எங்கெங்கே தங்குவது ? சாப்பாடு என்ன பண்றது ? ... இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் தான் பயணத்தை ஆரம்பித்தோம். நினைத்தபடி, போட்ட ப்ளான் படி எல்லாம் நலமே இருந்தது.

நயாகரா பத்தி ஒரு சில வரிகள் எளிமையா சொல்லிட்டு, உங்களுக்காக படங்கள் கீழே.

காடு மேடு
பள்ளம் பதுங்குழி,

எல்லாம் கடந்து
நில்லாமல் தவழ்ந்து,

இருநாட்டை இணைத்து
சளசளவென இசைத்து,

கொட்டும் அழகில்
ஒட்டியது மனதில் !



எங்கோ பிறந்து,
எதிலும் தவழ்ந்து !


ஆற்றை நித்தம் காண,
வீட்டை கட்டினேன் !


பார்த்து ஓடு,
பள்ளம் இருக்கு அங்கே !!


அலை மோதி,
புகை கிளம்பும் !


இங்கிருந்து பார்த்தால்
ஏதும் தெரிகிறதா ?


சற்று தள்ளி வந்தால்,
சள சளப்புப் பேரிறைச்சல்


அம்மாடியோவ்.....
இன்னிசையாய் ஒலிக்க
இதயம் சிலிர்த்தது !


கரும் பாறையும்
கசிந்து உருகும்.


அக்கரை சென்று பார்த்தால்
அற்புதக் காட்சியாம்,
இக்கரையில் இவ்வளவே !


நீர்த் துகள் காற்றிலே,
புகை மண்டலம் விண்ணிலே.


கண் கொள்ளா காட்சி,
நயாகரா நீர்வீழ்ச்சி !

---

ஜூன் 25, 2009 விகடன் முகப்பில்

ஜூன் 25, 2009 யூத்ஃபுல் விகடனில்

4 comments:

ராமலக்ஷ்மி said...

நயம் மிகு கமெண்டுகளுடன் காட்டி வீட்டீர்கள் எங்களுக்கு நயகராவை. அத்தனை படங்களும் அருமை.

//பார்த்து ஓடு,
பள்ளம் இருக்கு அங்கே !!//

ரசித்தேன்:)!

சதங்கா (Sathanga) said...

//நயம் மிகு கமெண்டுகளுடன் காட்டி வீட்டீர்கள் எங்களுக்கு நயகராவை. அத்தனை படங்களும் அருமை.//

ஏகப்பட்ட படங்கள் எடுத்தாலும், எதை எதை பதிவிடுவது என ஏக குழப்பம். நேரமும் அதிகம் தேவைப்படுகிறது. உங்கள் வரிகள் படித்து அத்தனையும் மறந்து, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நானானி said...

நானும் எனக்காகக் கொட்டிய நயகராவை கொட்டவா? உங்க பதிவைப் பாத்ததும் ஆசை, அருவியாக கொட்டுதே.

சதங்கா (Sathanga) said...

நானானி said...
//நானும் எனக்காகக் கொட்டிய நயகராவை கொட்டவா? உங்க பதிவைப் பாத்ததும் ஆசை, அருவியாக கொட்டுதே.//

கொட்டுங்க கொட்டுங்க. பார்க்க ஆவலாக உள்ளோம்.