நேற்று முன் தினம், ஒரு அரை நாள் அலுவலகம் சென்ற போது (பனியைப் பொருட்படுத்தாது, என் கடன் பணி செய்து கிடப்பதே :))) வழியில் எடுத்த புகைப்படங்கள், மற்றும் எங்கள் வீட்டில், அருகில் எடுத்த படங்கள் என இங்கே வரிசையாய் ...
ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா ...

ஐஸ் வைத்த மரம்
அழகா வீட்டின் முன் ...
பாதை எல்லாம் கட்டியான
பனிச் சறுக்கு ரோட்டிலே ...
பாதை எல்லாம் கட்டியான
பனிச் சறுக்கு ரோட்டிலே ...
குதித்தோடி உருண்டாயோ
தாவிப் புரண்டாயோ ...
வெண்கட்டித் தோட்டத்துள்
புதையுண்ட சிறுவீடு
தபால்காரர்:
என் கடன் பனியிலும்
பணி செய்வதே !!!
தார் ரோட்டை மறைத்து
தரையிறங்கிய வெண்மேகம்
வெண்பட்டில் முளைத்த
கண்ணாடிப் புற்கள்
எவ்வளவோ சேகரித்தும் ...
பனிமனிதன் செய்ற அளவிற்கு தேறலையே !!!
மொத்தமாய் உறைந்த
முள்நீர்த் தொட்டி
விரிசடை வெண்சடை
பரப்பிய கூரை
அம்மா தினம் பேன்-கேக் ஊத்தி தர்றாங்க. நாம அவங்களுக்கு ஐஸ்-கேக் கொடுக்கலாம் ...