நயாகரா பத்தி ஒரு சில வரிகள் எளிமையா சொல்லிட்டு, உங்களுக்காக படங்கள் கீழே.
காடு மேடு
பள்ளம் பதுங்குழி,
எல்லாம் கடந்து
நில்லாமல் தவழ்ந்து,
இருநாட்டை இணைத்து
சளசளவென இசைத்து,
கொட்டும் அழகில்
ஒட்டியது மனதில் !

எங்கோ பிறந்து,
எதிலும் தவழ்ந்து !

ஆற்றை நித்தம் காண,
வீட்டை கட்டினேன் !

பார்த்து ஓடு,
பள்ளம் இருக்கு அங்கே !!

அலை மோதி,
புகை கிளம்பும் !

இங்கிருந்து பார்த்தால்
ஏதும் தெரிகிறதா ?

சற்று தள்ளி வந்தால்,
சள சளப்புப் பேரிறைச்சல்

அம்மாடியோவ்.....
இன்னிசையாய் ஒலிக்க
இதயம் சிலிர்த்தது !

கரும் பாறையும்
கசிந்து உருகும்.

அக்கரை சென்று பார்த்தால்
அற்புதக் காட்சியாம்,
இக்கரையில் இவ்வளவே !

நீர்த் துகள் காற்றிலே,
புகை மண்டலம் விண்ணிலே.

கண் கொள்ளா காட்சி,
நயாகரா நீர்வீழ்ச்சி !
---
ஜூன் 25, 2009 விகடன் முகப்பில்

ஜூன் 25, 2009 யூத்ஃபுல் விகடனில்
